Main Menu

பொன்­சே­காவுக்கு புதிய பதவி?

உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்­ச­ராக பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­காவை நிய­மிக்­கு­ மாறு, அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குப் பரிந்­துரை செய்ய ஐக்­கிய தேசி­யக் கட்சி முடிவு செய்­துள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வின் தலை­மை­யில் அலரி மாளி­கை­யில் நேற்று நடந்த உயர்­மட்­டக் கூட்­டத்­தி­லேயே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. சரத் பொன்­சேகா உள்­ளிட்ட ஆறு புதிய அமைச்­சர்­களை நிய­மிக்­கு­ மாறு அரச தலை­வ­ருக்­குப் பரிந்­துரைசெய்ய ஐ.தே.க. ஏற்­க­னவே முடிவு செய்­தி­ருந்­தது.

இதன்­போது பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு ஒதுக்க முடிவு செய்­யப்­பட்ட அமைச்­சுக்­க­ளுக்கு மேல­தி­க­மாக, உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்­சுப் பத­வி­யை­யும் வழங்க நேற்­றைய கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தனிப்­பட்ட பய­ண­மாக ஜப்­பா­னுக்­குச் செல்­லும் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பிய பின்­னர், பீல்ட் மார்­ஷல் சரத் பொன்­சே­காவை இந்­தப் பத­விக்கு நிய­மிக்­கு­மாறு பரிந்­து­ரைக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பகிரவும்...