இலங்கை
வைத்திய சாலையிலும் தொடரும் சுரேஷ் சலேவின் உணவுத்தவிர்ப்பு?

சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுமேலும் படிக்க...
சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் படிக்க...
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள் ; அரசியல் நோக்கத்துக்காக மகனை பலிகொடுக்க என்னால் முடியாது – சுரேஸ் சலேவின் தாய் கோரிக்கை

எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காக நான் அவரை ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க என்னால் முடியாது என்று சுரேஸ் சலேவின் தாய் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை விடுத்துள்ளார். தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமதுமேலும் படிக்க...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் நேற்று (7)மேலும் படிக்க...
திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது

திறைசேரியிலிருந்து செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணைய குற்றவாளிகளிடம் சென்ற சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதிப் பற்றிய குழு இன்றுமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ‘பெண்கள் சந்திப்பு’ நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் போது பெண்களின் சமூக பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. முன்னதாகமேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் (08) இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்றது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜாமேலும் படிக்க...
வவுனியா ஓமந்தையில் சோகம்: இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை – நாவற்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...
கொழும்பு தேசிய வைத்திய-சாலைக்கு விசேட பாதுகாப்பு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுரேஷ்மேலும் படிக்க...
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அவர் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வைத்தியசாலையில்மேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகமேலும் படிக்க...
சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர் CID பணிப்பாளருக்கு கடிதம்

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக மருத்துவமேலும் படிக்க...
சலேயைக் காண சிஐடி-க்கு வந்த மனைவி ஊடக சந்திப்பு

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளதெனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ்மேலும் படிக்க...
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார் இந்தச் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் பின்வரும் உறுதிமொழிகளை வழங்கினார்: காணாமல் போன மீனவர்களுக்கு வங்கிப் பாக்கிக் கடன்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செலுத்துவதற்குரிய அல்லது தீர்ப்பதற்குரிய உரிய நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுக்கும். படகுகள் மற்றும் இயந்திரங்கள்:மேலும் படிக்க...
பாடலை பாடியதற்காக கைது செய்ய முடியாது : டக்ளஸ் தேவானந்தா

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்ற எதிர் பார்த்துள்ளோம் – வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர

எதிர்வருங்காலங்களில் நிலையான அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு, காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் மாற்றம், கடல்சார் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ளமேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; அவகாசம் கோரிய காவல்துறை

முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள பகுதியிலுள்ள தனியார் காணி உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிஸார் மூன்றுமாத கால அவகாசம் கோரியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திமேலும் படிக்க...
பலாங்கொடை வியாபார நிலையத்தில் தீப்பரவல்

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரின் தும்பகொடை பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (07) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ வேகமாகப் பரவியதன் காரணமாக குறித்த வியாபார நிலையம் தீக்கிரையாகி பாரிய சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று : கடற்றொழிலாளர்-களுக்கு அவசர எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- …
- 467
- மேலும் படிக்க
