இலங்கை
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியா தனியார்மேலும் படிக்க...
வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்
வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு,மேலும் படிக்க...
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் உருவாக்கப்பட உள்ளது – மொட்டு கட்சி
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பயங்கரவாத எதிர்ப்புமேலும் படிக்க...
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியது – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்றமேலும் படிக்க...
இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் போராட்டம்
இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களைமேலும் படிக்க...
பிரதமருடன் கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.மேலும் படிக்க...
சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது – விஜயதாச ராஜபக்ச
சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அதேபோன்றுமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானம்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில்மேலும் படிக்க...
வெடுக்குநாறி மலை விவகாரம்: உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.மேலும் படிக்க...
நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன் – ரணில் விக்ரமசிங்க
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான மேலும் படிக்க...
வட கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் – 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம்
வடக்கு கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன. நேற்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மாணம்மேலும் படிக்க...
ஜனநாயகம் மறுக்கப்பட்டால் மக்கள் உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் – இரா.சாணக்கியன்
தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கைவைத்தால் மக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்புமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலதிற்கு எதிராக நடவடிக்கை – தேசிய மக்கள் சக்தி
சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எதிர்க்கட்சியான தேசியமேலும் படிக்க...
கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் – சிறிதரன்
கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
பிரதமர் தினேஷை சந்திக்க உள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் உள்ளூராட்சித்மேலும் படிக்க...
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை
போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல்மேலும் படிக்க...
வெடுக்குநாறி மலையில் கழற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்: அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்தனர். இதன் பின்னர் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம்மேலும் படிக்க...
கோட்டாவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது – ஹிருணிக்கா தெரிவிப்பு
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் என்றும் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பம்
மாவை சேனாதிராஜா தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதனும் பல உறுப்பினர்களும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 256
- மேலும் படிக்க