இலங்கை
முல்லைத்தீவு வாக்களிப்பு- முழு விபரம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையைத் தவிர்த்தால் இன்று வாக்களித்திருக்கமேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீத வாக்களிப்பு: 94ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு குறித்து அவர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கல்குடாமேலும் படிக்க...
இறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு
ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இன்றையநாள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர்மேலும் படிக்க...
வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு இரு அடுக்கு விசேட பாதுகாப்பு- பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவுபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்மேலும் படிக்க...
தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!
நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார், அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71%மேலும் படிக்க...
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும
பொதுஜன பெரமுன பாரிய வெற்றியடையும். இதனை நாளை வெளியிடப்படுகின்ற தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துமென அக்கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டலஸ் அழகப்பெரும மேலும் கூறியுள்ளதாவது, “விகிதாசாரமேலும் படிக்க...
தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த
பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டுமேலும் படிக்க...
பொது தேர்தல் – இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு
இலங்கையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் பாதுகாப்பிற்காக 82091 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேடமேலும் படிக்க...
தேர்தல் நாளில் அநுராதபுரத்தில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார். அநுராதபுரத்தில் கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம் பெற்றுவரும் வாக்களிப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதில் இருந்து பரவலாக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை அவதானிக்கமேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன் வைத்துள்ள அவசர கோரிக்கை
வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை,மேலும் படிக்க...
தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்துள்ளேன் – இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் தாம் வாக்களித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில்மேலும் படிக்க...
மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதத்தை கைவிட்டு ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் – ஆர். மனோகரன்
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்புமேலும் படிக்க...
தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப் பிடிக்குமாறு வேட்பாளர்களுக்கு கபே வலியுறுத்தல்
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்களின் வேட்பாளர்கள் தேர்தல் சட்ட விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்
பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார்மேலும் படிக்க...
கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு – கொழும்பிலேயே அதிக பாதிப்பு
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது. கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் படிக்க...
சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 940 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெப்ரல் அமைப்பின்மேலும் படிக்க...
வாக்குகளை எண்ணும் பணி மற்றும் கட்சி முகவர்கள் நியமனம் குறித்து வர்த்தமானி அறிவிப்பு
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் வாக்காளர்களின்மேலும் படிக்க...
பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி
கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- …
- 257
- மேலும் படிக்க