இலங்கை
யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32)மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வி அமைச்சு
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி குறித்த அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலின் பின்னர் கல்வியமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் ஆடி அமாவாசை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) பிதிர்க் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். அத்தோடு ஆலயத்தில் நெய் விளக்குகளை ஏற்றி பெருமானுக்கு மோட்ச விளக்குகளை ஏற்றி பக்தர்கள் நிறைவேற்றினர். அத்தோடு இறந்தவர்களின் ஆன்மா கிடைத்ததற்காக அடியவர்கள்மேலும் படிக்க...
அம்பாறை வாகன விபத்தில் நால்வர் காயம்!
அம்பாறையில் தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தனியார் பேருந்து பகுதியளவில் சேதமடைந்ததுடன் வேன் முற்றாகமேலும் படிக்க...
தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தது தமிழ் மக்கள் பேரவை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன்மேலும் படிக்க...
சிறுபான்மையின மக்கள் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்
சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் தங்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம்மேலும் படிக்க...
ஐ.நா.வில் தமிழர் பிரச்சனையைக் கையாள தனியான செயற்றிட்டம் தேவை – சார்ள்ஸ் நிர்மலநாதன்
ஐ.நா. விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் பெரும்பான்மையான நாடுகளும் ஒத்துழைப்பினை வழங்குவதன் ஊடாக மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் – உதயகுமார்
தமிழ் மக்களுக்கெதிரான பேரினவாத அரச அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே முடியும் என அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
கைகலப்பு கத்திக்குத்தில் முடிவடைந்தது – யாழ். பல்கலை. மாணவன் காயம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
அமைச்சுப் பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் – சி.பி.ரத்னாயக்க
அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார். பத்தனை பகுதியில்மேலும் படிக்க...
யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைமேலும் படிக்க...
வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன்
தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்மேலும் படிக்க...
தேர்தல் ஆணைக் குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு
வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை
பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ளமேலும் படிக்க...
அமைச்சு பதவியை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது – பிரசன்னா
அமைச்சர் அந்தஸ்தை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. எமது மக்களின் நிரந்த சுயஉரிமைகளை முதலில் பெற்று நலிவடைந்துள்ள எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்ய வேண்டும் என டெலே அமைப்பின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித்மேலும் படிக்க...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – மஹிந்த
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- …
- 256
- மேலும் படிக்க