இலங்கை
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரம் 06 – 13 ஆம் வகுப்புளுக்காகவே பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதேநேரம் தரம்மேலும் படிக்க...
பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று (‘கிரி அம்மா தானய’) இன்று ( புதன்கிழமை) முற்பகல் நாராஹேன்பிட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தைமேலும் படிக்க...
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்
இலங்கையின் 75ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டின் 75ஆவது வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவதுமேலும் படிக்க...
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டாம் – செல்வம்
கொரனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொரனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாகமேலும் படிக்க...
மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் – சுகாதார அமைச்சு
எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனதுமேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் உடலை புதைப்பதா? தகனம் செய்வதா? – அமைச்சரவையின் முடிவு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராகமேலும் படிக்க...
மீனை பச்சையாக உட்கொண்டு ஆபத்தில்லை என்பதை காண்பித்த முன்னாள் அமைச்சர்!
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம்மேலும் படிக்க...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை சமர்ப்பித்து நாளை பிரதமர் விசேட உரை
2021ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. இதன்போது, அரச செலவீனங்களுக்கான நிதியை இலங்கைக்குள் அல்லதுமேலும் படிக்க...
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். ஐந்தாம் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
பதவியேற்று ஓராண்டு நிறைவு – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோகமேலும் படிக்க...
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி: சிவஞானம் சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.மேலும் படிக்க...
மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்- வியாழேந்திரன்
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன், அவரது பிறந்த நாளானமேலும் படிக்க...
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தடையாக இருக்கும் பன்முக சவால்கள்
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார் தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும்மேலும் படிக்க...
வயோதிபர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம்!
நாட்டில் உள்ள வயோதிபர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அபாய நிலை ஏற்படுவதற்கானமேலும் படிக்க...
அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக தீபாவளி திருநாள் அமையட்டும்- ஜனாதிபதி
தீபாவளி திருநாள் அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
பிரதமரின் தீபாவளி வாழ்த்து செய்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையைமேலும் படிக்க...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்- செல்வம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்தே அனைவரும் கொண்டாடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...
ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்- எதிர்க்கட்சி உறுப்பினர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- …
- 257
- மேலும் படிக்க