Main Menu

ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்- எதிர்க்கட்சி உறுப்பினர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக் கட்சிக்கு மட்டுமல்லாது முழு அரசியலுக்கும் சேதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களில் செய்தவற்றைக் கூட இந்த அரசாங்கம் இதுவரையில் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது பாரிய சுகாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...