Main Menu

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரம் 06 – 13 ஆம் வகுப்புளுக்காகவே பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அதேநேரம் தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கை தொடர்பிலும்  மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை.

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 09 ஆம் திகதி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்ட நிலையிலேயே அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...