Main Menu

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்- செல்வம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்தே அனைவரும் கொண்டாடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் செல்வம் அடைக்கலநாதன் மேலும்  கூறியுள்ளதாவது, “நாம் எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான இச் சூழ்நிலையில், எமது பாதுகாப்பினை நாங்களே உறுதிப்படுத்த வேண்டியிருக்கின்றது.

எனவே, கொரோனா வைரஸில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து அமைதியாக வீடுகளில் இருந்து தீபத் திருநாளை கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தீபாவளி திருநாளை இலங்கையிலும், உலகெங்கிலும் கொண்டாடும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்” என அவர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...