Author: trttamilolli
இன, மத, கட்சி பேதம் இன்றி அனைவரும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் – பிரதமர்!
அனைத்து மக்களும் இன, மத, கட்சி பேதம் இன்றி சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுமேலும் படிக்க...
தகுதியற்றவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பாக அதிகளவானமேலும் படிக்க...
இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர்மேலும் படிக்க...
கொரோனா பன்மடங்கு பெருகுகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 937,567 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47,256மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.மேலும் படிக்க...
இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 25,150 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,829 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் இது 27% அதிகரிப்பு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸினால்மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில்,மேலும் படிக்க...
தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள்மேலும் படிக்க...
நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் கொரோனா: வைத்திய நிபுணரின் முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் நிர்பீடனம் குறைந்தவர்களை இலகுவாகத் தாக்கும் எனவும் சிறுநீரக நோய்கள் நிர்ப்பீடனக் (நோயெதிர்ப்பு) குறைவுக்கு ஒரு பிரதான காரணம் என்றும் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் குறிப்பிடுகையில், “இன்று நாட்டிற்குப் பெரும்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மூவர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நோயாளிகள் குணமடைந்துள்ளவும் அதன்படி இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கிரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் 231 பேர் சிகிச்சைபெற்றுவருவதுடன் 146 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு
இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால்மேலும் படிக்க...
கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு!
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) மாத்திரம் 21 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 17 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 173 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம், கொழும்பு தவிர்ந்த சில இடங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!
நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
குப்பிழானைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லூசேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் திரு:- சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின்மேலும் படிக்க...
உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப் போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்துமேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!
அளவுக்கு அதிகாமாக நோய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப்மேலும் படிக்க...
நாள் ஒன்றுக்கு 10,000 லிற்றர் கைகழுவும் ஜெல் தயாரிப்பு
பரிசில் உள்ள பிரபலமான மருந்தகம் ஒன்று, கை கழுவும் ஜெல் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்தவெளி வீதியில் உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பிரான்சில் வேகமாக பரவுவதால், கை கழுவும் ஜெல் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இங்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிற்றர்மேலும் படிக்க...
எட்டு வீத மாணவர்களின் தொடர்புகள் இல்லை – கல்வியமைச்சர்
கொரோனா வீச்சினால், கடந்த 16 திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டு, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், மாணவர்களிற்கு இணையவழிப் பாடங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் இடையிலான தொடர்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டிலிருந்த கல்விகற்கும் முறையில் (Ecole à la maison), கடந்த இரண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 450
- 451
- 452
- 453
- 454
- 455
- 456
- …
- 827
- மேலும் படிக்க