Main Menu

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது ஜனாதிபதி எந்த வித முகமூடியும் அணியாமல், மருத்துவருடன் கைகளைக் குலுக்கி சாதாரணமாக நடந்து கொண்டார்.

இந்நிலையில், புடினிடம் பேசிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஜனாதிபதி புடினுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியதாக ஜனாதிபதி மாளிகை கூறியுள்ளது.

பகிரவும்...