சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு!
சுவிஸ் அரசாங்கம் புகையிலை மற்றும் நிக்கொற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மிகக் கவனக்குறைவுடன் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான மத்திய ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
குறிப்பாக வேப்பிங் விதிகள் கடுமையாக இல்லை என அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக, புகையிலைத் தொழில்துறை அதன் செயற்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்துறையின் அழுத்தத்தின் விளைவாக நாட்டில் விதிமுறைகளுக்கான தீவிரம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.