Day: October 17, 2020
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத்குமார்
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் ஏற்புடையதல்ல என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’மேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 24ஆயிரத்து 2பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரைமேலும் படிக்க...
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு இந்த பட்டினிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ்,மேலும் படிக்க...
உலக பட்டினி குறியீடு 2020: தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
உலக பட்டினி குறியீட்டில் 107 நாடுகளில் இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பட்டினியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும்.மேலும் படிக்க...
எஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாதான் காரணமென சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாச ராவ், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார்.மேலும் படிக்க...
காலம் கடந்து விட்டது: இந்திய-இலங்கை உடன்படிக்கை இப்போது உயிர்ப்புடன் உள்ளதா?
கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு கிளையின் அனுசரணையோடு நியூ இந்தியா போறம் (New India Forum) என்ற அமைப்பினால் ஒரு மெய்நிகர் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ‘இலங்கை யாப்பின் 13ஆவது திருத்தத்தில் இந்தியாவின் வகிபாகம்’ என்றமேலும் படிக்க...
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட முடிவு!
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவ்வாறு செயற்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
இம்ரான் கானை பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் பல்லாயிரக் கணக்கான மக்கள் போராட்டம்!
பாகிஸ்தானில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது. மத்திய பாகிஸ்தான் நகரமான குஜ்ரான்வாலாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போராட்டத்தினை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) நடத்தியது. இது 11 எதிர்க்கட்சிமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!
நியூஸிலாந்தில் 53ஆவது பொதுத் தேர்தலில் நியூசிலாந்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடிகளுக்கான கதவுகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டன. இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடையும். எந்தவொரு கட்சியால் நாட்டை வழிநடத்த முடியும் மற்றும் தொற்றுநோயை சிறப்பாக கையாள முடியும்மேலும் படிக்க...
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை: 48 பேர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்யும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தின் புனே, சோலாப்பூர், சாங்லி, சதாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ஊர்களில் வெள்ளம்மேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்
அ.தி.மு.க.வின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். முதலமைச்சர், தனது சொந்த ஊரான சேலம்- சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றியுள்ளார். சேலம்- சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்.மேலும் படிக்க...
யாழில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும்மேலும் படிக்க...
ரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காதமை அவரைப் பாதுகாப்பதற்காக அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவில்சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் , நம்பிக்கையில்லாப்மேலும் படிக்க...
சமூக பரவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
மினுவாங்கொட பகுதியில் தொற்று பரவியமைக்கான ஆதாரம் இன்னும் அறியப்படாத நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சமூக பரவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மினுவாங்கொடவுடன் தொடர்புடையன எனமேலும் படிக்க...
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!
பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47மேலும் படிக்க...
60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. சின்னத்துரை ஐயர் மகேசன் (திருப்பதி வீடியோ) 17/10/2020
தாயகத்தில் நல்லூரை சேர்ந்த பிரான்ஸ் Torcy இல் வசிக்கும் சின்னத்துரை ஐயர் மகேசன் (திருப்பதி வீடியோ) அவர்கள் 16ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 60வது பிறந்தநாளை 17ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.மேலும் படிக்க...
“அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா“ (பிறந்தநாள் நினைவுக்கவி)
இராமேஸ்வரத்தின் இமயம் ஒன்று உதயமானதே ஐப்பசித் திங்கள் பதினைந்தில் தாய்மொழி தமிழில் கல்வி கற்று அறிவியல் துறையில் சாதனை பெற்று அக்கினிச் சிறகை விரித்து அண்டத்தை ஆய்ந்தாரே அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா ! காலம் தந்த மகான் மண்ணையும் விண்ணையும் அளந்தமேலும் படிக்க...