Main Menu

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை: 48 பேர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்யும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அந்த மாநிலத்தின் புனே, சோலாப்பூர், சாங்லி, சதாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பல ஊர்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் புனே, அவுரங்கபாத் மற்றும் கொங்கன் மாவட்டங்களில் மட்டும் மழை வெள்ளத்தால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 20,000பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு இலட்சம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...