Main Menu

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் ஏற்புடையதல்ல என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையிலேயே சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர்.

எனவே, கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது.

ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக்கூடாதே தவிர சாதனையாளரின் சரித்திரத்தை அறிவதில் தவறில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...