Day: September 17, 2020
நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இனவாத நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை PSG அணி மார்செய் நகரின் OM அணியுடன் மோதியது. இதில் 0-1 எனும்மேலும் படிக்க...
பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம்!
பார்வையாளர்களின் வருகை இன்றி ஈஃபிள் கோபுரம் வெறிசோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 13,000 இல் இருந்து 14,000 வரையான பார்வையாளர்களை சந்திக்கும் ஈஃபிள் கோபுரம் தற்போது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளமை காரணமாக சராசரியாக 2,000மேலும் படிக்க...
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவு: ஐக்கிய இராச்சியம், பஹ்ரைனுக்கு ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு
பரம எதிரியான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் உண்டாகும் விளைவுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே பொறுப்பாகும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில்மேலும் படிக்க...
புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸ் ஜனாதிபதி தெரிவிப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினிடம் ஆயுத உதவி கேட்டதாக பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தெரிவித்துள்ளார். உள்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டங்கள் நடத்திவருகின்றமைக்கு மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 15ஆம் திகதி லுகாஷென்கோ, சோச்சி நகரில் உள்ள ரஷ்ய ஜனாதிபதிமேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!
நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீம் உயர்வு. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்
இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதால் ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என அவரது மகன் சரண் தெரிவித்தார். கொரோனா பாதிப்பிற்கு உள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் சென்னை எம்.ஜி.எம்.மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் தடைப்பட்டதால் 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் நெருக்கடியால், உலகம் முழுவதும் கழகம் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் தடைபட்டதால், கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம்மேலும் படிக்க...
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, எதிர்வரும்மேலும் படிக்க...
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ்வா்தன் நம்பிக்கை வெளியிட்டார். கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம்- உமாச்சந்திரா பிரகாஸ்
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைகள் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் தேர்தல்கள் வணிக ரீதியாக மாற்றமடையும் அபாயம் உள்ளதாக முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆதவனுக்கு கருத்துத்மேலும் படிக்க...
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து கனடா பிரதமரிடம் தமிழ் செயற் பாட்டாளர்கள் முக்கிய கோரிக்கை!
இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாவில் சில சட்ட ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சட்டக் கோட்பாட்டு மாற்றங்களைச் செய்துதர வேண்டுமென கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொருமேலும் படிக்க...