Main Menu

நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!

PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  இனவாத நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை PSG அணி மார்செய் நகரின் OM அணியுடன் மோதியது. இதில் 0-1 எனும் கணக்கில் PSG அணி தோல்வியடைந்தது. இது ஒரு புறம் இருக்க அந்த போட்டியின் போது OM அணியின் வீரரான Alvaro Gonzalez இற்கும் நெய்மருக்கும் மோசமான உரையாடல் இடம்பெற்றுள்ளது. தவிர நெய்மர் Alvaro Gonzalez இன் தலையில் (பிடரியில்) அடித்துள்ளார்.  பிரெஞ்சு உதைபந்தாட்ட கழகங்களுக்கான ஒழுக்காற்றல் குழு (La commission de discipline ) இதனை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் ‘இனத்துவேசம்’ உள்ளதாக அறிய முடிகிறது. விசாரணைகள் முடிவுக்கு வரும் வரையில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...