Day: September 8, 2020
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் – பிரதமர் மோடி
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 960மேலும் படிக்க...
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்
அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கொரோனாமேலும் படிக்க...
கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். இதன்போது மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கும் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். இருப்பினும் நீதிமன்றத்தால் சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்றமேலும் படிக்க...
மோசடியில் ஈடு பட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் – வாசுதேவ
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்மேலும் படிக்க...
பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம்
2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டம்?
தென்னிந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கொரோனா உறுதியானதால், கடந்த மாதம் 5ஆம் திகதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்மேலும் படிக்க...
பேரா.ச. சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் – முதலமைச்சர் வெளியிட்டார்
பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். நேற்றைய தினம் செப்டெம்பர் 7ம் திகதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மேலும் படிக்க...
Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று
PSG அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் உதைபந்தாட்ட கழகம் மீதான கொரோனா தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுவரை ஆறு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஏழாவது வீரராக Kylianமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பு ஊசிகளை உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ளும் யுனிசெஃப்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து, உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொள்ளவுள்ளது. உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு ஊசியைத் தயாரிக்கும்மேலும் படிக்க...
கொரோனா பரவல் : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால்மேலும் படிக்க...
20ஆவது திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!
20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றமேலும் படிக்க...
கொரோனா தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் – ஜெய்சங்கர்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்வொன்றில் காணொளி காட்சி வாயிலாக கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனாவிற்கு பிந்தைய உலகில்மேலும் படிக்க...
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 92ஆவது இடம்!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் இலங்கை 92ஆவது இடத்தில் உள்ளது. ஆழமான அறிவுக்குழு (Deep Knowledge Group) என்ற சிந்தனைக் குழு இந்த தரவரிசையை கணித்துள்ள நிலையில், தரவரிசையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்குமேலும் படிக்க...
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டுமேலும் படிக்க...
ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம்
சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனைமேலும் படிக்க...