Main Menu

கொரோனா பரவல் : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.  கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது,  பரிசோதனைகளை அதிகரிப்பது,  சிகிச்சை மையங்களை தயார்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும்  இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...