Main Menu

மக்களுக்கும் 20ஆவது திருத்தத்தில் உள்ள ஆபத்து நன்றாகவே தெரியும்- மனுஸ நாணயக்கார

அரசாங்கத்துக்கு வாக்களித்த, சுயநினைவுள்ள அனைத்து மக்களுக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள ஆபத்து நன்றாகத் தெரிந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 69 இலட்சம் பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். இவர்கள், ஜனநாயகத்தை இவ்வாறு இல்லாது செய்யவா வாக்களித்தார்கள் என்று அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன் என மனுஸ நாணயக்கார கூறியுள்ளார்.

இதேவேளை 20ஆவது திருத்தச்சட்ட மூலம், 19ஆவது திருத்தச்சட்டத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளை இல்லாது செய்யவே கொண்டுவரப்படவுள்ளது என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டள்ளார்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே, நாம் எதிர்க்காலத்தில் முழு அரசியலமைப்பையே மாற்றியமைக்கத்தான் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...