Main Menu

சீனாவின் பிடியில் இருக்கும் இந்திய இளைஞர்கள்!

இந்திய இளைஞர்கள் ஐந்து பேரை  சீன இராணுவம் கடத்திச் சென்றதாக கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  “இந்த விவகாரம் தொடா்பாக இந்திய இராணுவம் தொலைபேசி வாயிலாக அருணாசல் எல்லையில் உள்ள சீன இராணுவ நிலைக்கு தகவல் தெரிவித்துள்ளது. சீனாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” எனக்  கூறியுள்ளாா்.

அருணாச்சல பிரதேசம், சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த ஐந்து இளைஞர்களும் கடந்த வாரம் எல்லையோர காட்டுப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தின்போது சீன இராணுவத்திடம் சிக்காமல் தப்பிய இரு இளைஞா்கள் தங்களது கிராமத்துக்கு திரும்பி வந்து கடத்தல் தொடா்பான தகவலை தெரிவித்துள்ளதுடன், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...