Main Menu

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கையை அறிவித்தது தமிழக அரசு!

மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கக்பட்டுள்ளதுடன் 67ஆயிரத்து 212 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மின்னணுவியல் துறைக்கான புதிய தொழில் உற்பத்திக் கொள்கையின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

அதில், மின்னணு துறையில் முதலீடு செய்வோருக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு, நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கால கடன்களுக்கு அதிகபட்சமாக 5வீதம் வரை வட்டி மானியம், மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீட்டுத் தொகையில் 30வீதம் வரை மூலதன மானியம் என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மின்னணு துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னணு பழுது பார்க்கும் பூங்காங்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படுவதோடு 2024 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...