Day: July 22, 2020
துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி, மேலும் இருவர் காயம்
சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். Chalon-sur-Saône (Saône-et-Loire) நகரில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்நகரின் rue du Lieutenant-André வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் நபரே இத்துப்பாக்கிசூட்டை மேற்கொண்டுள்ளார். 75 வயதுடைய நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
தீயில் இருந்து தப்பிக்க மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த இரண்டு சிறுவர்கள்
தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரு சிறுவர்கள் கட்டிட்டத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் Villeneuve மாவட்டத்தில் ( Grenoble (Isère) ) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Galerie de l’Arlequin வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்துமேலும் படிக்க...
“கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள்”
எண்பத்தி மூன்று ஆடியில் ஆடித்திங்கள் இருபத்திமூன்றில் அரங்கேறிய அனர்த்தங்கள் கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள் வெறுப்பாகி நீறு பூத்த நெருப்பாகி தணலாகக் கொதிக்கிறதே இன்றும் ! இனவாதம் தூண்டப்பட்டு அரசியல் இலாபம் பேணப்பட்டு கொலைகள் அரங்கேறப்பட்டு குளிர் காய்ந்த கொடியநாள் கறுப்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)
தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 20ம் திகதி ஜூலை மாதம் திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.மேலும் படிக்க...
உலக அளவில் ஒன்றரை கோடி பேரை தாக்கியது கொரோனா!
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை கோடியை கடந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்றினால் ஒரு கோடியே 50 இலட்சத்து 98 ஆயிரத்துமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ரஷ்யாவின் தலையீடு: பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை!
இங்கிலாந்தில் ரஷ்ய தலையீட்டின் அச்சுறுத்தலை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் நட்பு நிலையற்ற பிற நாடுகளுடனான தொடர்பாடலை இங்கிலாந்து கையாண்டவிதம் குறித்து தொழிற்கட்சி விமர்சித்திருந்தது. இந்நிலையில், நாட்டில் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது குறித்துமேலும் படிக்க...
இந்தியாவில் நவம்பரில் விற்பனைக்கு வருகின்றது கொரோனா தடுப்பு மருந்து
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று செரும் இன்ஸ்டிடியூட் (Serum Institute) தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான AstraZeneca உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனாமேலும் படிக்க...
நல்லூர் திருவிழா குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டது யாழ்.மாநகர சபை!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும் என யாழ்.மாநகர சபை பிரதி மேயர் து.ஈசன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் இன்றையமேலும் படிக்க...
தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் தொற்று!
தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 492 ஆகமேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நுரைச்சோலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்மேலும் படிக்க...
அரசவை கட்டடம் தகர்ப்பு – இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று(புதன்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டது. தொல்பொருள் திணைக்களமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)
தாயகத்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கணுக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா விஸ்வலிங்கம் அவர்கள் 22ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார்மேலும் படிக்க...
முதன் முதலாக இராணுவ செயற்கைக் கோளை ஏவியது தென்கொரியா: உலக நாடுகளில் 10ஆவது இடம்!
தென்கொரியாவின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral Air Force Station) வான்படை மையத்திலிருந்து குறித்த அனாசிஸ்-2 (ANASIS-II) செயற்கை்ககோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அணு ஆயுத அண்டை நாடானமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி- விரைவில் இந்தியாவிலும் பரிசோதனை
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்தவுள்ள புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்திமேலும் படிக்க...
சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற பலர் அபராதத்துடன் விடுவிக்கப் பட்டுள்ளனர்
சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, விசா நடைமுறைகள் மற்றும் அரசு வகுத்த விதிகள் உட்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகமேலும் படிக்க...
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அங்கு துருக்கி படைகள் இருக்கும் – ஜனாதிபதி எர்டோகன்
சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும்வரை அங்கு துருக்கிபடைகள் இருக்கும் என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள்மேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த!
சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்கிறது – மாணவர் பிரதிநிதிகள் தெரிவிப்பு
யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதனால், சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழுத்தத்தங்களால் ‘சட்ட முதுநிலை விரிவுரையாளர்’ பதவியை இராஜினாமா செய்தார் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார். கலாநிதி. குமாரவடிவேல் குருபரன்மேலும் படிக்க...
தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை
தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம்மேலும் படிக்க...