Main Menu

தீயில் இருந்து தப்பிக்க மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த இரண்டு சிறுவர்கள்

தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரு சிறுவர்கள் கட்டிட்டத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்துள்ளனர்.  நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல்  Villeneuve மாவட்டத்தில் ( Grenoble (Isère) ) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Galerie de l’Arlequin வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. கரும் புகையுடன் கூடிய பாரிய அளவுடைய தீ வேகமாக பரவி வந்தது. அதைத் தொடர்ந்து, கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் சிக்கியிருந்த இரு சிறுவர்கள் தீயில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியே குதித்துள்ளனர்.  கட்டிடத்தின் வெளிப்பகுதியில் சிலர் கூடியிருக்க, அவர்களை நோக்கி அடுத்து அடுத்து இரு சிறுவர்கள் குதிக்கும் காணொளி பெரும் வைரல் ஆகியுள்ளது. இந்த அசாத்தியமான முடிவு குறித்த இரு சிறுவர்களின் உயிர்களையும் காப்பாற்றியுள்ளது.  இந்த இரு சிறுவர்கள் எவ்வித தீக்காயங்கள் ஒன்றி தப்பிக்க, 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.  பின்னர் கட்டிட்டத்தில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்படுள்ளனர். 

பகிரவும்...