Main Menu

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி, மேலும் இருவர் காயம்

சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.  Chalon-sur-Saône (Saône-et-Loire) நகரில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்நகரின் rue du Lieutenant-André வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் நபரே இத்துப்பாக்கிசூட்டை மேற்கொண்டுள்ளார்.

75 வயதுடைய நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.  இச்சம்பவத்தில் கணவர் மற்றும் மனைவி சாவடைந்துள்ளனர். அவர்களின் 21 வயதுடைய மகள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தவிர, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அவ்வீட்டினை தீயிட்டு கொழுத்தியுள்ளார். பல்வேறு தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...