Main Menu

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நுரைச்சோலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் திணைக்கள குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட இரண்டாயிரத்து 731 பேரில் இதுவரை இரண்டாயிரத்து 64 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன், இன்னும் 656 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் 11 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...