Day: March 3, 2020
ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியாமேலும் படிக்க...
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது – ஐ.நா.
சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பானமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தீவிரம் – முக்கிய நாட்டவர்களுக்கான விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் திகதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாமேலும் படிக்க...
தமிழகக் கலாசாரத்தை, பண்பாட்டைச் சிதைக்க முயற்சிப்பது மன்னிக்க முடியாத துரோகம்: ஸ்டாலின்!
தமிழகக் கலாசாரத்தை, பண்பாட்டைச் சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தேர்தலுக்கான தமது சின்னத்தை அறிவித்தது!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன, தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பின் இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுஜன பெரமுன தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இவ்வாறு தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
வவுனியாவில் விஷேட அதிரடி படையினரால் இரு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விஷேட அதிரடி படையினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் படிக்க...
அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தி.. சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஓன்றுபட வேண்டும் – அகில விராஜ்
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ள நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் ஒன்றுபட்டால் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றமேலும் படிக்க...
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ்!
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒன்றாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் மூவருக்கும் வெளிநாட்டு பயணங்கள் மூலம் வைரஸ்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது
பிரித்தானியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை, மிடில்செக்ஸில் உள்ள மவுண்ட் வேர்னன் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு!
பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனரக ஜெனரல் ஜெரோம் சாலமன் அறிவித்துள்ளார். ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3100ஆக உயர்வு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 70இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.மேலும் படிக்க...
அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!
வட கொரியா அடையாளம் தெரியாத வகையிலான இரு ஏவுகணைகளை கடலில் ஏவி பரிசோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வட கொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள வோன்சான் பகுதியிலிருந்து கடல் பரப்பில் கிழக்கு நோக்கி இந்த இருமேலும் படிக்க...
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அளவில் தமிழகம்மேலும் படிக்க...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்த தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்த தடை விதிக்க வேண்டுமென கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் பொதுமக்கள் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
மதத் தலைவர்களை தௌிவுபடுத்த நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை தரிசித்தனர். இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டியதன்மேலும் படிக்க...
நுண் கடன் அழுத்தத்தில் இருந்து வடக்கு மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை!
நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். வட.மாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அழைப்புமேலும் படிக்க...