Main Menu

ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது.

நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கியுள்ளோம். மக்கள், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலமாகவே இந்த நோய் பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த பிரசாரம் மூலம் நாட்டில் சுகாதாரம் மோசமாக இருக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும். இதுவே நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி’ என கூறினார்.

1969ஆம் ஆண்டு நைஜீரியாவின் லாசா நகரில் இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால் அதற்கு ”லாசா காய்ச்சல்” என்று பெயரிடப்பட்டுள்ளது. லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும்.

பகிரவும்...