Main Menu

ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ்!

ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஒன்றாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் மூவருக்கும் வெளிநாட்டு பயணங்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சமீபத்தில் ஈரான் அல்லது எகிப்துக்கு பயணம் செய்தவர்கள், அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள்கள் மூலம் பரவியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

அத்தோடு, இதுவரை கொரோனா வைரஸ் உள்நாட்டில் பரவுவதாகத் தெரியவில்லை என்று டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

பகிரவும்...