Main Menu

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3100ஆக உயர்வு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 70இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதில் வொஷிங்டன் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

இதுவரை அமெரிக்காவில் 100இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு நாடுகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சீனா, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தை சில நாடுகள் முடக்கியுள்ளன.

பகிரவும்...