Main Menu

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அளவில் தமிழகம் மட்டுமே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக நிதியுதவியை வழங்கி வருகின்றது.

தமிழக அரசு, சுகாதார சேவையை சிறப்பாக வழங்கி வருவதால் கர்ப்பிணிகள் உயிரிழப்பது குறைவடைந்துள்ளது.

இதேவேளை  உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தமிழக வைத்தியர்கள் மருந்து கண்டுபிடித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...