Day: December 6, 2019
போக்குவரத்தில் முன்னேற்றம் இல்லை! – திங்கள் வரை நீடிக்கலாம்?
இன்று வெள்ளிக்கிழமை சொல்லிக்கொள்ளும் படியான போக்குவரத்து முன்னேற்றம் இல்லை என SNCF தரப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்தில் கணிசமான முன்னேற்றம் எதுவும் இல்லை என SNCFமேலும் படிக்க...
தடைகளையும் மீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்தும் ஈரான் – ஐரோப்பிய நாடுகள் ஐ.நா.வுக்கு கடிதம்
ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தை மீறி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்துகிறது என ஜேர்மன், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கடிதம் எழுதியுள்ளன. ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
ஹைதராபாத் என்கவுன்டர்: பொலிஸார் மீது பாயவுள்ள மனித உரிமைகள் சட்டம்?
ஹைதராபாத் என்கவுன்டர் தொடர்பாக தெலுங்கானா மாநில பொலிஸ் அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது. மும்பையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணரத்ன சதாவர்டே கூறுகையில் ‘‘ஹைதராபாத்தில்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் 35 ஆயிரம் பேர் நிர்க்கதி – பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு
நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்க பிரிவுகளில் 10,738 குடும்பங்களைச் சேர்ந்த 35,756 பேர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம்: 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளனர். 21 பாதுகாப்புமேலும் படிக்க...
பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
போராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டின் பைசன்ரைன்(Byzantine) ஓய்வூதிய முறையை மாற்றியமைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்புமேலும் படிக்க...
வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை?
வட கொரிய ஏவுகணைத் தளத்தில் புதிய இயந்திரங்கள் சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகமாக CNN இனால் வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்களின் உதவியுடன் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வட கொரியாவின் சோஹே (Sohae) ஏவுகணைச் சோதனைத் தளம் அழிக்கப்பட்டு விட்டதாக அண்மையில்மேலும் படிக்க...
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு!
எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது. Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒருமேலும் படிக்க...
எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் – தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறினார் பிரியங்காவின் தந்தை
ஹைதராபாத்தில் கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா இனி சாந்தியடையும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண்மேலும் படிக்க...
பெண் மருத்துவர் கொலை – 4 கொலையாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ஆம் திகதி தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பாட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர்மேலும் படிக்க...
அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்தது ‘ரௌடி பேபி’ பாடல்
நடிகர் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலின் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப்மேலும் படிக்க...
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் மாயம்?
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஹான தடுப்பு முகாமில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சியில் கனத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதனை அண்மித்த செல்வபுரம், பொன்னகர்,அறிவியல்நகர், இந்துபுரம் உள்ளிட்ட கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.மேலும் படிக்க...
தெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை!
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின்மேலும் படிக்க...
நித்தியானந்தா குறித்து ஈக்குவடோர் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு
சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் கொடுக்கவில்லை எனவும் அவரின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும் ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். நேபாளம் வழியாக போலி கடவுச் சீட்டு மூலம்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எத்தகைய சவால்களுக்கும் தயார்- டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எத்தகைய சவால்களுக்கும் தயாராக இருக்கின்றேன் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும்மேலும் படிக்க...