Main Menu

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம்: 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளனர்.

21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 3,147 குடும்பங்களைச் சேர்ந்த 10,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 182 குடும்பங்களைச் சேர்ந்த 628 பேர் 6 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3,317 குடும்பங்களைச் சேர்ந்த 10,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பாதுகாப்பான அமைவிடங்களில் 714 குடும்பங்களைச் சேர்ந்த 2209 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 252 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சுகாதாரம் மற்றும் உணவுத் தேவைகள் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

பகிரவும்...