Main Menu

போக்குவரத்தில் முன்னேற்றம் இல்லை! – திங்கள் வரை நீடிக்கலாம்?

இன்று வெள்ளிக்கிழமை சொல்லிக்கொள்ளும் படியான போக்குவரத்து முன்னேற்றம் இல்லை என SNCF தரப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்தில் கணிசமான முன்னேற்றம் எதுவும் இல்லை என SNCF இன் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். ‘திங்கள் வரை இது நீடிக்குமா?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு, <<இது தற்போது திங்கள் வரையான போக்குபரத்து நிலமைகளை தெரிவிக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் போது திங்கட்கிழமையின் போக்குவரத்து நிலமைகள் அறிவிக்கப்படும்>> என தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், <<ஆனால் பயணிகள் முடிந்தவரை தங்கள் பயணங்களை இரத்துச் செய்யவோ, பிற்போடவோ பரிந்துரைக்கின்றோம்>> என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டிசம்பர் 10 ஆம் திகதி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

பகிரவும்...