பெண் மருத்துவர் கொலை – 4 கொலையாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
கடந்த 27ஆம் திகதி தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பாட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.
இதன்போது குறித்த நால்வரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.