ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.
கயூரன் சினோஜா தம்பதிகள் திருமணநாளை முன்னிட்டு சுவிஸ் அருள்மிகு
ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகசபையின் ஏற்பாட்டில், ஸ்ரீராமபுரம்
திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.
கூரைத்தகடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் வித்தியாலயத்தின் அதிபர்
கருணாநிதியிடம் கையளித்தனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் வேண்டுகோளை ஏற்று
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன்
ஐயாவின் முயற்சியின் பயனாக இந்த உதவியை வழங்கிய கயூரன் சினோஜா
தம்பதிகளுக்கும், சுவிஸ் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாக
சபையினருக்கும் பாடசாலை மற்றும் கல்விச்சமுகத்தினர் தமது நன்றிகளை
தெரிவித்துக்கொள்ளுகின்றனர்.