Main Menu

விளையாட்டு கழகங்களுக்கு ரிபிஆர் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரால் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன-(படங்கள் இணைப்பு)

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உள்பட்ட நயினாமடு, ஆயிலடி, பெரியமடு,சின்னடம்பன், கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் ஆகிய விளையாட்டு கழகங்களுக்கும்,முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் விளையாட்டு
கழகத்தினருக்கும் பாதணிகள் வழங்கப்பட்டன.ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் வழிகாட்டலின் கீழ் பிரான்ஸில் இருந்து கழகங்களுக்கான பாதணிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா, த.தே.கூ லண்டன் கிளை உறுப்பினர் மனோகர்
பிரபு, சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தின் அதிபர் கெங்கநாதன் ஆகியோர் கலந்து
கொண்டு பாதணிகளை கையளித்தனர்.பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டு கழகத்தினரும் பாதணிகளை வழங்கிய ரிபிஆர் ட்ரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளருக்கும், ரி.ஆர்.ரி வானொலியினருக்கும், நன்றிகளை தெரிவித்தனர்.
118
27
37
47
57
65
7585
95
104
119
123
133
பகிரவும்...