ஜெனீவா: விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது!
ஜெனீவா விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பொருட்களை திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பயணிகளிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.