Main Menu

வவுனியா சிறைச் சாலையிலிருந்து தப்பியோடிய கைதி

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச் சென்ற இக்கைதியை தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...