Main Menu

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்பு

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராஜ், சுவிஸ் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர், மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள், சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புலனற்றவர்கள் போரினால் விழிப்புலனற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1 2 3 4 5

பகிரவும்...