Main Menu

முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைப்பினருக்கு வழங்கிய உதவி

முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைபபினருக்கு இன்று எங்கள் அமைப்பின்ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும். பொது மக்களிடமும் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் இரு கட்டங்களாக முறையே 57,000 ரூபா. 1,11,000 பெறுமதியான மருத்துவ பொருட்களினை வழங்கி அவர்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓரளவேனும் நிவர்த்தி செய்துள்ளோம்.

இந்த வகையில் எமது அமைப்பின் ஊடாக இவர்களுக்கானஉதவிகளை வழங்க முன்வாருங்கள் என தயவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் இன்று கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள சோலைவனத்தில் வைத்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்தில் உள்ள படுக்கை புண்ணினால்
பாதிப்புற்று உயிருக்காக போரடி வரும் 31 பேருக்கு மருத்துவ Normal saline, Gauze, Urine bags, plaster, Povidone iodine solution, Catheter என்பனவற்றினை
வழங்கியுள்ளோம். இதற்கான சுமார் 1,25,000 ரூபா பெறுமதியான நிதி அனுசரனையினை S.piraveen (Canada), S.சந்திரன் விமலாதேவி (swiss), S.piratheepan(Jaffna¬),
T.lingotpavanathan(J¬affna) ஆகிய மனிதநேயமுள்ள உள்ளங்கள் வழங்கியுள்ளார்கள்.

உயிரிழை அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இதுவரை காலமும் சுமார் 2,93,000 ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம். எமது அமைப்பின் தாயவன கோரிக்கையினை ஏற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கான கல்வி.
வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வரும் எமது முகநூல் நண்பர்கள் வட்டுக்கோட்டை வாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம்.IMG_7730

4

3

2

IMG_7726

பகிரவும்...