Main Menu

மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது!

மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டும் என கடந்த 8 நாட்களாக எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடிய நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டமையால் அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...