Main Menu

“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார்.

இதன்போது , விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார்.

இதன் புகைப்படத்தை வெளியிட்டு பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடலாசிரியர் விவேக்கிடம் முதலமைச்சர் , ” இந்த அரசாங்கம் அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பாடலாசிரியர் கருத்து தெரிவிக்கையில், நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி.

எனக்கு இது வரலாற்றுப் பதிவு. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் என குறிப்பிட்டுள்ளார்.