ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்
ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
ராஜஸ்தானின் தவுசா அருகே டில்லி-மும்பை விரைவுச்சாலையில் லொறி மீது பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது.
அதைத் தொடர்ந்து, இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இந்த தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
விபத்துக்கான சரியான காரணம் தெரியாத நிலையில், பேருந்து ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பேருந்தின் அதிவேகமும் இந்த விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
