Main Menu

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான C130 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

92 பேருடன் பயணித்த விமானத்தில் இருந்து 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ககாயன் டி ஓரோ நகரில் இருந்து படையினரை அழைத்துச் சென்ற குறித்த விமானம் தரையிறங்கும் போது பயணப் பாதையிலிருந்து விலகி அருகிலுள்ள கிராமத்திற்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பகிரவும்...