Main Menu

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும் பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் எந்த சீர்திருத்தமும் இடம்பெறவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...