Main Menu

நெதர்லாந்தில் கத்திக் குத்து தாக்குதல் – மூவர் காயம்

நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நெதர்லாந்தின் தி ஹொக் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

லண்டன் பிரிட்ஜ்ஜில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில் இதுபோன்றதொரு தாக்குதல் சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...