Day: November 30, 2019
Gare du Nord ரயில் நிலைய வெடிபொருள் அச்சுறுத்தல்: பரிஸில் பாதுகாப்பு தீவிரம்!
பரிஸில் மிகவும் பரபரப்பாக இயங்கும் Gare du Nord ரயில் நிலையத்திலிருந்து வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸார், பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பலமுறை போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகமேலும் படிக்க...
நெதர்லாந்தில் கத்திக் குத்து தாக்குதல் – மூவர் காயம்
நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். நெதர்லாந்தின் தி ஹொக் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையமேலும் படிக்க...
பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை
லண்டனில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெட்ரோ பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பிரித்தானியாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்திக் குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. லண்டன் பிரிட்ஜ்ஜில் நேற்று இடம்பெற்றுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர்மேலும் படிக்க...
தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு
லண்டனில் தாக்குதலை நடாத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 வயதுடைய உஸ்மான் கான் என்ற நபரே லண்டனில் தாக்குதலை மேற்கொண்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உஸ்மான் கான் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு கைதுமேலும் படிக்க...
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று
இன்னிசை அரசி பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக… வேலை மாற்றம் காரணமாகமேலும் படிக்க...
ஜப்பான் பிரதமர் உலகத்தின் ஒரே ஒரு முட்டாள்: வடகொரியா கடும் விமர்சனம்!
ஏவுகணை சோதனை குறித்து விமர்சித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்க கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இது கொரிய தீபகற்பத்தில் பெரும்மேலும் படிக்க...
“அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை… அதனை யாரும் தடுக்க முடியாது”
தனது அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதியாக இல்லாததால் தனது அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர் என கூறினார். அரசியலில்மேலும் படிக்க...
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான “மகாராஷ்டிர விகாஸ் முன்னணி” அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷியாரின் உத்தரவுக்கமைய குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்குமேலும் படிக்க...
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு சென்று இன்று (30) முற்பகல் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் தனது குழுவுடன் இரண்டுநாள் இலங்கையில் இருக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார். இருமேலும் படிக்க...
இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்
இந்திய ராஷ்ட்ரபதி பவனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் உத்தியோகப்பூரவ விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும்மேலும் படிக்க...
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வைரஸ்!
குரங்குகளிடம் இருந்து மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹெர்பஸ் பி எனும் வைரஸ் மீண்டும் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ககோஷிமா நகரில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது. குரங்குகளைப் பிடித்துமேலும் படிக்க...