பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை
லண்டனில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெட்ரோ பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பிரித்தானியாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக கத்திக் குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
லண்டன் பிரிட்ஜ்ஜில் நேற்று இடம்பெற்றுள்ள கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.