Main Menu

தாய்வான் பூகம்பம் – சுரங்கப் பாதையில் சிக்குண்டுள்ள 77 பேரை மீட்க தீவிர முயற்சி

தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக127 பேர்  மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும்  சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.

டராகோ  தேசிய பூங்காவில் உள்ள சொங்டே  சுரங்கப்பாதைக்குள் ஜேர்மனியை சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டுள்ளனர்.

இதேவேளை டராகோ தேசிய பூங்காவில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த  பேருந்துகளில் 50 சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிரவும்...